தேவேந்திர பட்நாவிஸ், நிதின் கட்கரி ஆகியோரின் சொந்த ஊரில் பாஜக தோல்வி அடைந்தது அக்கட்சியினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆறு ஜில்லா பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய் கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் ”மகா விகாஸ் அகாதி” கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தின் ஆறு ஜில்லா பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற தேர்தல் முடிவுகள் கடந்த செவ்வாய் கிழமை அன்று அறிவிக்கப்பட்டது. அம்மாநிலத்தில் தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் - சிவசேனா கூட்டணி ஆட்சி அமைத்த பிறகு நடைபெற்ற முதல் தேர்தல் என்பதால் எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது. இதில் தற்போது ஆட்சியில் இருக்கும் ”மகா விகாஸ் அகாதி” கூட்டணி 4 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இதற்கடுத்து காங்கிரஸ் 73, தேசியவாத காங்கிரஸ் 46 இடங்களில் வெற்றி பெற்றுள்ளன. சிவசேனாவை பொறுத்தவரை 36 இடங்களில் இருந்து 46ஆக வெற்றி அதிகரித்துள்ளது. ஆனால் காங்கிரஸை பொறுத்தவரை 100ல் இருந்து 73ஆக வெற்றி சரிந்துள்ளது.